நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!
வேலூர் - 22,
வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரம், அமுதம் -1 நியாயவிலை கடையில் பிரதமர் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 3வது மண்டலம் 37 வது வார்டு அனைத்து பாஜக வினர் இணைந்து பத்திரிக்கையாளர் துணையுடன் நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் தரமற்ற அரிசி இருப்பதும். மேலும் கடையை சுற்றிலும் சுகாதாரமற்று காணப்படுவதை கண்டு நியாயவிலைகடை விற்பனையாளரிடம் விசாரித்தபோது 'எங்களுக்கு அரசு அனுப்பும் அரிசியை தான் நாங்கள் வழங்குகிறோம்'. என்று தெரிவித்தனர்.
ஆனால் பிற அரிசிமூட்டைகளை பிரித்துப்பார்த்தபோது நல்ல அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் தரமற்ற அரிசி பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற்று நல்ல அரிசியை வழங்குகிறோம் என நியாய விலைக்கடை விற்பனையாளர் தெரிவித்தார்.
தரமான அரிசியை வழங்கவேண்டும், நியாயவிலை அங்காடி அருகில் சுத்தமாக பராமரிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment