Translate

Tuesday, July 21, 2020

திமுக நகர செயலாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை - 21.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு. கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கோட்டை பாபு

இவர் கடந்த மூன்று முறை திமுக நகர கழக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து வந்தவாசி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அவரது வீடு உள்ள தெரு முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS