Translate
Saturday, July 25, 2020
குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்
Friday, July 24, 2020
பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை பறிக்க நினைப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கும், மத்திய அரசின் முடிவை ஏற்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்ததற்கும் பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அறிவித்த புதிய வருமானவரி முறையின்படி, நிரந்தரக் கழிவு ரூ.2.50 லட்சம் தவிர வேறு எந்த வரி விலக்கும், கழிவுகளையும் கோர முடியாது. அத்தகைய சூழலில் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், சம்பளத்தை மட்டுமே ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டவர்களின் மொத்த சம்பளத்துக்கும், நிகர வருமானத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கூடுதலாக பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும் குடும்பங்களாக இருந்தால், அவர்களால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. புதிய திட்டமும் சமூக அநீதியாகவே அமையும்.
நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, கிரீமிலேயர் வரம்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பறிக்க மத்திய அரசு துடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் சம்பளமும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்பட்டது தான் பிரச்சினையில் தொடக்கம் ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட நிலையில், பொதுத்துறை, தனியார்துறை பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொள்ளப்பட்டது 1993-ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு எதிரானது என்பதால், அந்த முறையை கைவிடும்படி சொல்வது தான் சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிடுவது 1993-ஆம் ஆண்டின் குறிப்பாணைக்கு எதிரானது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்கு பெரும் தடையாக உள்ள கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாவிட்டால், சம்பளத்தை சேர்க்காமல், கிரீமிலேயர் வரம்பை இப்போதுள்ள 8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பி
சேலம் : ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் தெரிவித்த மலைவாழ் மாணவியின் 2 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு ராமன் பட்டி என்ற மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நேற்று முன் தினம் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது அங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவி ஜெயந்தி (16) எஸ்.பி.,யை சந்தித்து தனது ஐ.ஏ.எஸ் படிக்கும் தனது ஆசையை தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை தனது சேலம் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் வழங்கி 2 ஆண்டுகள் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாணவிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஒரே நாளில் 49,310 பேருக்கு பாதிப்பு..
Thursday, July 23, 2020
சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!
கொரோனா இன்று ஒரு புதிய உச்சத்தை தொட்டதா ?
மத்திய அரசின் நான்கு அவசர சட்டங்களும், விவசாயிகளின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் - வைகோ
சென்னைக்கு திரும்ப இ-பாஸ் சுமார் ஐந்து லட்சம் விண்ணப்பம் குவிகிறது.
இந்திய எல்லையில் அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் குவிப்பு..!
சீன ராணுவம் |
அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Wednesday, July 22, 2020
புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
20ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலகம் அறிவித்தது. 20ம் தேதியன்று சட்டசபைக்கு கவர்னர் வராமலே பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா? என்று கிரண்பேடியிடம் கேட்டதற்கு, பட்ஜெட்டுக்கு ஒப்புதலை தந்துள்ளேன் சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி வரும் 24ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது
கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை பாதுகாக்க பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று பதவியேற்ற அதிமுக எம்பிகள் மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து
+2 மாணவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு
அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடி உரை
டெல்லி: அமெரிக்க - இந்தியா தொழில்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொது உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!
மத்திய பிரதேச கவர்னர் இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி (21.7.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன். மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகார் மாநில ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது.
லால்ஜி டாண்டனின் மறைவு, உத்தர பிரதேச மாநில மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tuesday, July 21, 2020
பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்
இறுதிச்சடங்கு
ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில்
சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப்
பணியாற்றிவந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர்
ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின்
பிரதமர் அலுவலக இணைச் செயலளர் அமுதா ஐ ஏ எஸ் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் .
நாளை முதல் ஊரடங்கு கிடையாது! - முதல்வர் எடியூரப்பா
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நிலைநாட்டி கொண்டே கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனாவிற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
கேரளத்தில் ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா தொற்று
பினராயி விஜயன் |
செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
திமுக நகர செயலாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா காலமானார்!.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், தொகுதி மறு சீரமைப்பு மூலம் ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவான பிறகு 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.அஸ்லம் பாஷா |
`இளைஞரின் மரணம் வருத்தமளிக்கிறது!’ - திருப்பத்தூர் எஸ்.பி.
திருப்பத்தூர்-ஜூலை-21.
எஸ்.பி. விஜயகுமார் |
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த முகிலன் (27). கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி), முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக பைக்கில் வெளியில் சுற்றியதாகக் கூறப்படுகிறது. வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீசார் முகிலனின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை கொண்டுவந்து.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்’ என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.
முகிலன் |
இதில், பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. மருத்துவக் குழுவின் சிறப்பு கவனிப்பில் இருந்த முகிலன், 9 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இறந்த நபருக்கு 6 மாத கைக் குழந்தை உட்பட சின்ன சின்னதாக மூன்று குழந்தைகள் இருக்கிறது. குடும்பச் சூழல் இப்படியிருக்க அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம் என்று நினைக்கிறோம். மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
கருப்பர் கூட்டம் யு டுயூப் சானலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கம். யூ டியூப் நிறுவனம் நடவடிக்கை.
மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக-வினர் ஆர்பாட்டம்
Monday, July 20, 2020
இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை அறியும் வசதி
இந்த மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பத்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறி உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா
ஆக. 1ம் தேதி முதல் பத்திர பதிவில் அதிரடி மாற்றம்.. பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!
தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.
இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.
சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை'' என்றார்.
காமராஜர் பிறந்தநாள் விழா.
Sunday, July 19, 2020
ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை
பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம்
கோவில் நிர்வாகம் வேண்டுகோள்!
பவானி-ஜூலை-19
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் ஆறுகள் , நீர்நிலைகள் சங்கமிக்கும் இடங்களிலும், ஆற்றோரங்களிலும் மறைந்த தங்களது மூத்தோருக்கு வழிபாடு செய்தால் , அதன் பலன் நேரடியாக மறைந்த மூத்தவர்களை அடைந்து அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இவ்வாறு வழிபாடு செய்வதால் குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால், காவிரி, பவானி மற்றும் அமுத நதிகள் சங்கமிக்கும் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இன்னிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் காவிரி ஆற்றில் நீராட செல்லும் வழியில் தடுப்புகள் வைத்துக் கட்டப்பட் டு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நாளை திங்கள்கிழமை (ஜூலை.20) பக்தர்கள் கூடுதுறை கூடுதுறைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனால், வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற வேண்டாம் என பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தடை உத்தரவினைப் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை மீறி வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆய்வு
திருப்பத்தூர்-ஜூலை-19.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளின் விபரங்கள் குறித்தும், வணிகவரித்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களிடமும் கலந்துரையாடினார்.
கிருஷ்ணமூர்த்தி,
செய்தியாளர்
மக்கள் சந்திப்பு நாளிதழ்
இன்று ஒரே நாளில் மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ. க்களுக்கு கொரோணா தொற்று உறுதி
Saturday, July 18, 2020
இலவச கட்டில், மெத்தை மற்றும் நாற்காலி வழங்கும் விழா
Featured Post
குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்
திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர், புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த பெருமா...
POPULAR POSTS
-
மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க ...
-
டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள...
-
ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் வேண்டுகோள்! பவானி-ஜூலை-19 20-07...